**HI**FRIENDS**WELCOME TO MY BLOG**

ஆசிரியர்கள் நியமனம்

Written on 10:47 AM by பூபாலன்(BOOBALAN)


பூபாலன்

கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு லேப்டாப்-23-06-2011

Written on 10:25 PM by பூபாலன்(BOOBALAN)

தமிழகத்தில் இந்த ஆண்டில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2 மற்றும் 3ம் ஆண்டுகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் 1 மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு "லேப்டாப்கள்" வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் 9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்கள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்படி இந்த ஆண்டு முதற்கட்டமாக பள்ளிகளை பொறுத்தவரை பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கும், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளை பொறுத்தவரை முதல் மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும், இன்ஜினியரிங் கல்லூரிகளை பொறுத்தவரை 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும் லேப்டாப்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் 2ம் ஆண்டு மாணவ, மாணவிகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, 4ம் ஆண்டு மற்றும் 5ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும் படிப்படியாக லேப்டாப்கள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் விபரங்களை அரசு சேகரித்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் விபரங்கள் குறித்து கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டில் லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளின் பட்டியல் குறித்த கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் புள்ளி விபர பட்டியல் சேகரிக்கும் பணி நடக்கிறது. இப்பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் மாவட்ட வாரியாக இந்த ஆண்டில் லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளின் பட்டியல் தயாரிக்கப்படும். தொடர்ந்து மாநில அளவில் இப்பட்டியல் தொகுக்கப்படும். தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் இம்மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்கள் வழங்கும் திட்டம் துவக்கப்படும்.

இந்த லேப்டாப்களை தரமானதாகவும், மானிட்டர், டிவிடி ரைட்டர், வயர்லெஸ், ஹார்ட் டிஸ்க், கேமிரா உட்பட பல்வேறு வசதிகளுடன், அதிக திறன் கொண்டதாக இருக்கும் வகையில் கொள்முதல் செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அணு உலைகள் பாதிப்பால் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம்! ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்

Written on 11:09 PM by பூபாலன்(BOOBALAN)

http://tamilcnn.com/images/stories/tamilcnn/march-2011/tech/tsunami-hits-japan-video.jpg 
ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் மற்றும் பசுபிக் கடலை அண்டிய சுமார் 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா, நியூசிலாந்து தைவான், பெரு, சிலி அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி, மெக்ஸிகோ, மற்றும் மத்திய, தென் அமெரிக்க பகுதிகள் உள்ளிட்ட 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுனாமி ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடுமாறு அலாஸ்கா பகுதியின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அவசரகால மேலாண்மை இயக்குநர் ஜான் மேடன் தெரிவித்தார்.

இதேவேளை ஹவாய் தீவுப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இன்று இந்தோனேசியா நியூசிலாந்து ஆகிய நாடுகளை ஆழிப்பேரலை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
http://tamilcnn.com/images/stories/tamilcnn/march-2011/tech/atomic4.jpg 

ஜப்பான் பூகம்பம், சுனாமியால் அணு உலைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன அங்குள்ள புகுசிமா மாவட்டத்தில் 5 இடங்களில் அணு உலைகள் இருந்தன.

இந்த 5 அணு உலைகளுமே பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.அதில் ஒரு அணு உலையில் அதிக அளவில் கடல் நீர் புகுந்து விட்டது.

இதனால் அணு உலை குளிர்படுத்தும் அமைப்பு முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதில் இருந்து அணுக்கதிர் வீச்சு கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

எனவே அந்த பகுதியில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் 3000 ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப் பட்டு உள்ளனர்.

அதே போல மற்ற அணு உலைகளிலும் கசிவு ஏற்படலாம் என கருதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டு உள்ளது.

அணுகதிர் வீச்சு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 5 அணு உலைகளிலும் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் ஜப்பானில் பெரிய அளவில் மின் துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.



ஜப்பானை புரட்டி போட்டது; தி.மு.க.,வை கலங்கடித்தது

Written on 10:16 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_204037.jpg 
சென்னை : ஜப்பான் நாட்டில் நேற்று சுனாமி தாக்கிய அதே நேரத்தில், சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்துக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் புகுந்தனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், "கலைஞர் டிவி'யின் பங்குதாரர்களான தயாளு, கனிமொழி எம்.பி., ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கீழ்தளத்தில் கட்சியிருடன் அப்போது நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. தி.மு.க., அலுவலகத்துக்குள்ளேயே சி.பி.ஐ., இரண்டாவது முறையாக புகுந்தது, தி.மு.க., வட்டாரத்தை கலங்கடித்துள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தொடர்பான ஏலத்தில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி, மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அத்துறையின் மத்திய அமைச்சராக இருந்த தி.மு.க.,வின் ராஜா, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ராஜாவிடம் நடத்திய விசாரணையில், "டி.பி. ரியாலிட்டி' நிறுவனத்தின் உரிமையாளரான சாகித் உஸ்மான் பல்வாவை கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக ஆளுங்கட்சி தி.மு.க.,வின், "கலைஞர் டிவி'யில் 214 கோடி ரூபாய் முதலீடு செய்த தகவல் கிடைத்தது. "கலைஞர் டிவி'யைப் பொறுத்தவரை, முதல்வரின் மனைவி தயாளுவுக்கு 60 சதவீத பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், அதன் மேலாண் இயக்குனரான சரத் ரெட்டிக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. "கலைஞர் டிவி'க்கு எந்த வகையில் முதலீடு செய்யப்பட்டது என்பது தொடர்பாக கேள்விகள் எழுந்தன.இந்நிலையில், அந்த தொகையை கடனாக பெற்றதாகவும், 30 கோடி ரூபாய் வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்தில் வந்து சோதனையிடலாம் என்றும், "டிவி' நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக இம்மாதம் 31ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, தற்போது சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

"கலைஞர் டிவி' விவகாரத்தை தாண்டி, கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க சி.பி.ஐ., முடிவெடுத்து, அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. இதே சூழலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்னைகளும் எழுந்தன.இப்பிரச்னை அடங்கிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், "கலைஞர் டிவி' பங்குதாரர்களுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. அதில், நேற்று காலை "கலைஞர் டிவி' அலுவலகத்தில் விசாரணை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில், "கலைஞர் டிவி' அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தி.மு.க., வேட்பாளர்கள் நேர்காணல், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் வேளையில், நேற்று காலை 8.45 மணிக்கு திடீரென, டில்லி சி.பி.ஐ., பெண் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள், சென்னை சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் உதவியுடன் நுழைந்தனர்.அப்போது, "டிவி'யின் மேலாண் இயக்குனர் சரத் ரெட்டி இருந்தார். கனிமொழி, தயாளு இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, 10.15 மணிக்கு கனிமொழியும், 10.30 மணிக்கு தயாளுவும், "டிவி' அலுவலகத்திற்குள் நுழைந்தனர். திட்டமிட்டபடி, காலை 11 மணிக்கு, தயாளுவிடம் விசாரணை துவங்கியது. ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில், "டிவி'க்கு முதலீடு பெற்ற விதம், செலுத்தப்பட்ட வட்டித் தொகை எங்கிருந்து வந்தது என்பதற்கான விளக்கங்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. பிற்பகல் 12.15 மணிக்கு விசாரணை முடிந்து, தயாளு புறப்பட்டார். அடுத்ததாக, கனிமொழியிடமும், தொடர்ந்து சரத் ரெட்டியிடமும் விசாரணை நடந்தது. பகல் 2.10 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.ஐ., அதிகாரிகள், 2.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். விசாரணையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தாலும், தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் இன்னும் தி.மு.க., - காங்கிரஸ் இடையில் முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், சி.பி.ஐ.,யின் இந்த விசாரணை நடவடிக்கை, தி.மு.க.,வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ.,யின் அடுத்த கட்ட, "மூவ்' என்ன என்பது, யாருக்கும் தெரியாத நிலையில், என்ன நடக்குமோ என அனைத்து தரப்பும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. சுனாமி போல் "2ஜி' விவ காரம் தி.மு.க.,வை தாக்குவதால், கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

ஜப்பானை புரட்டி போட்டது:டோக்கியோ : ஜப்பானின் சமீபத்திய வரலாற்றில், இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரழிவில், அந்நாட்டின் வட கிழக்குப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொடர்ந்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிலநடுக்கப் பகுதியில் தான் ஜப்பான் அமைந்துள்ளது. பூமிக்கடியில் உள்ள யூரேஷியன், பசிபிக் மற்றும் பிலிப்பைன்ஸ் கண்டத் திட்டுகள் ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ளது ஜப்பான் தலைநகர் டோக்கியோ. இதனால், நிலநடுக்கம் ஜப்பானுக்கு வழக்கமானதே. மேலும் அங்கு எரிமலைகளும் அதிகம்.டோக்கியோ உள்ளிட்ட ஏழு பகுதிகள் அடங்கிய கான்ட்டூ பிராந்தியம், ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் அளவிலான நிலநடுக்கத்திற்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்ட பகுதி.பயங்கர நிலநடுக்கம்: கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. முதல் நாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து கடலில் இரண்டடி உயரமுள்ள சுனாமி ஏற்பட்டது. இரண் டாவது நாளில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.அதே நேரம், ஜப்பானின் வடகிழக்குப் பகுதி, சீனாவின் தென்பகுதி, பாப்புவா நியூகினியா நாடு ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், டோக்கியோவில் இருந்து 400 கி.மீ., தொலைவில் வடகிழக்குப் பகுதியில் கடலில் நேற்று, இந்திய நேரப்படி முற்பகல் 11.16 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையோர நகரான செண்டாயில் இருந்து 81 மைல் தொலைவில் கடலில், 15 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவுகோலில் பின்னர் 8.9 புள்ளிகள் பதிவானது.செண்டாய், புக்குஷிமா பகுதிகள் துவங்கி தென்பகுதியில் டோக்கியோ மற்றும் வடபகுதியில், ஐவேட் மாகாணம் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது.

மக்கள் அலறல்: டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதும், மக்கள் வீடுகளை விட்டு தெருக்களுக்கு வந்தனர். அவசரமாக எச்சரிக்கை சங்கும் ஒலித்தன. டோக்கியோ தெருக்களில் உள்ள 24 மணி நேர கடைகளில் சாண்ட் விச், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், குளிர்பானங்களை அவசரமாக வாங்கி கடையை காலி செய்தனர். கடைகளில் ஏற்பட்ட அதிர்ச்சியில் அங்கிருந்த பீங்கான் பொருட்கள் உடைந்து சிதறி குவியலாக இருந்தது. அவசர அவசரமாக அரசு அறிவிப்புகள் ஒலிபரப்பப்பட்டன. அலுவலகத்தில் இருந்து எல்லாரும் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். நெரிசலை தவிருங்கள். இரவு நேரம் வந்து விடும் என்பதால், பாதுகாப்பான இடங்களில் அல்லது அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

சுனாமி பேரழிவு: இந்நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி உருவானது. 10 மீ., (33 அடி) உயரத்துக்கு உருவான அலை, ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை கடும் வேகத்தில் வந்து தாக்கியது. தொடர்ந்து செண்டாய், புக்குஷிமா பகுதிகளுக்குள் அலை சீறிப் பாய்ந்தது.கார்கள், லாரிகள், படகுகள், கப்பல்கள், கட்டடப் பகுதிகள் என அனைத்தும் பொம்மைகளைப் போல சுனாமியில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டன. இந்தப் பயங்கரக் காட்சியை, "டிவி'யில் பார்த்த பலரும் மிரண்டனர். செண்டாய் மற்றும் டோக்கியோவின் புறநகர்ப் பகுதி உட்பட 80 பகுதிகளில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.செண்டாய் நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த பண்ணைகள் அனைத்தும் சுனாமி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. சுனாமி ஏற்பட்ட பின்னும் நிலநடுக்கம் பல முறை நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக துவங்கிய நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இனிமேல் தெரியவரும்.

அணு உலைகள் மூடல்: தொடர்ந்து நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள அணு உலைகள் அனைத்தும் மூடப்பட்டதாக அரசு அறிவித்தது. அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளியாகவில்லை என்று பிரதமர் நவோட்டா கான் தெரிவித்துள்ளார். எனினும், அணு உலைகள் இருக்கும் பகுதிகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. டோக்கியோ விமான நிலையம் மூடப்பட்டதால் விமானப் போக்குவரத்து தடைபட்டது.இந்நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஜப்பானின் அதே பகுதியை தாக்கக் கூடும் என்று நிலவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை : சுனாமியால் இந்தியாவுக்கும், ஜப்பானில் வாழும் இந்தியர்களுக்கும் ஆபத்து எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. இருந்தாலும், அந்த மையம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. ஜப்பானை பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கியது, 2004ல் இந்தியாவின் பல பகுதிகளை சுனாமி ஆழிப் பேரலை தாக்கியதை நினைவுபடுத்தியுள்ளது.டோக்கியோ அருகில் உள்ள கான்டூ மற்றும் கான்சாய் பகுதிகளில் வசிக்கும் 25 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை. இந்த பேரிடர் பாதிப்பில் இந்தியா உதவிக்கரம் நீட்ட தயார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி கூறுகையில், ""இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. இந்திய கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கும் என்ற அச்சமும் தேவையில்லை. அதேநேரத்தில், பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளன,'' என்றார்.கடந்த 2004ம் ஆண்டில் சுனாமி தாக்கிய போது, இந்தோனேசியா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அ.தி.மு.க., கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி: ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு

Written on 5:17 AM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_203313.jpg 
ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில், சுமுக முடிவு எட்டப்படாததால், அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் ம.தி.மு.க., போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ம.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகி யோர் தி.மு.க.,விற்கு தாவினர். திருமங் கலம் எம்.எல்.ஏ.,வாக இருந்த வீரஇளவரசன் மரணம் அடைந்தார். தற்போது மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் ம.தி.மு.க.,வில் உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் நான்கு இடங்களைப் பெற்ற ம.தி.மு.க., ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த ஐந்தாண்டுகளாக பல்வேறு பிரச்னைகளில், அ.தி.மு.க., எடுக்கும் முடிவையே ம.தி.மு.க., பின்பற்றியது. ஆளுங்கட்சியை எதிர்ப்பதிலும், தோழமை கட்சியை ஆதரிப்பதிலும் ம.தி.மு.க., உறுதியாக இருந்தது. அத்தகைய கட்சிக்கு தற்போது தொகுதி பங்கீடு விவகாரத்தில் புயல் வீச ஆரம்பித்துள்ளது.

அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் முதல் கட்டம், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் 35 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் கேட்டனர். இதற்கு எந்த பதிலும் அ.தி.மு.க., தரப்பில் தரப்படவில்லை. மூன்றாவது கட்டமாக 25 தொகுதிகளாவது கிடைக்கும் என, ம.தி.மு.க.,வினர் எதிர்பார்த்து உடன்பாடு ஒப்பந்தத்திற்கு அழைப்பார்களா என காத்திருந்தனர். ஆனால், 10 முதல் 12 தொகுதிகளே ஒதுக்க முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வைகோ அதிர்ச்சி அடைந்தார். குறைந்த தொகுதி எண்ணிக்கை முடிவை அவரால் நம்ப முடியவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய குழுவின் தலைவரும், திருப்பூர் மாவட்டச் செயலருமான ஆர்.டி.மாரியப்பன், தன் சொந்த ஊருக்கு விரக்தியோடு புறப்பட்டுச் சென்றார். குறைந்த தொகுதிகளை பெற, ம.தி.மு.க., தயாராக இல்லை. குறைந்தபட்சம் 21 தொகுதிகளாவது ஒதுக்கீடு செய்தால் தான் ஒப்பந்தத்தில் வைகோ கையெழுத்திடுவார் என்று ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை பொறுமையாக இருக்கவும், அ.தி.மு.க., தலைமையிடமிருந்து நல்ல முடிவுக்காக வைகோ காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சி 18 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளது. ஆனால், 11 தொகுதிகள் மட்டுமே தர அ.தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூ.,வும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு இணையாக 18 தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளது. ஆனால், இந்திய கம்யூ., கட்சிக்கு ஒன்பது தொகுதிகள் மட்டுமே தர முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் ஒரே தொகுதிகளைக் கேட்பதால், அந்தச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. எனவே, இரு கம்யூ.,கட்சிகளும் தங்களுக்குள் பேசி, ஒரு சுமுக முடிவுடன் வரும்படி அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. இறுதியில், மார்க்சிஸ்ட் கட்சி 14 தொகுதிகளுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 தொகுதிகளுக்கும் இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கையை மேலும் குறைப்பது குறித்து பேச்சு நடப்பதால் அ.தி.மு.க., கூட்டணியில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது முடிவு அ.தி.மு.க., கையில் உள்ளதாக கம்யூனிஸ்டுகள் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க.,வின் முடிவைப் பொறுத்து, எந்த நேரமும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

அ.தி .மு .க வை சந்திக்கிறது தே .மு. தி. க

Written on 11:47 PM by பூபாலன்(BOOBALAN)

http://epaper.dinamalar.com/DM/MADHURAI/2011/02/02/Article//001/02_02_2011_001_005.jpg

எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட இராணுவம் மறுப்பு; முபாரக் ஆட்சி கவிழும் ஆபத்து

Written on 5:45 AM by பூபாலன்(BOOBALAN)

எகிப்து நாட்டின் அதிபராக ஹோஸ்னி முபாரக் 30 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார். இவரது நீண்ட கால ஆட்சியில் எகிப்து பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது.

மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. விலைவாசி மிகவும் உயர்ந்து விட்டது. எனவே முபாரக் பதவி விலக வேண்டும் என மக்கள் வன்முறை போராட்டத்தில் குதித்தனர்.

இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக வெடித்தது. இன்று 8-வது நாளாக கலவரம் நீடித்து வருகிறது. தலைநகர் கெய்ரோ மட்டுமின்றி அலெக்சாண்ட்ரியா உள்பட நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருந்தும் கலவரம் ஓய்ந்தபாடில்லை.

மக்களை அமைதிப்படுத்த ஏற்கனவே இருந்த மந்திரி சபையை அதிபர் முபாரக் கலைத்துவிட்டார். புதிய இடைக்கால மந்திரி சபையை அமைத்துள்ளார். இருந்தும் மக்கள் அமைதியாகவில்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின் றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார்.

இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் அறிவித்து பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர்.

மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை முபாரக் ஏவிவிட்டார். ராணுவ டாங்கிகள், பீரங்கி வண்டிகள், தெருக்களில் நிறுத்தப்பட்டன எந்திர துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்கள் ஆங்காங்கே தயாராக நின்றனர். போராட்டகாரர்களை ஒடுக்கும்படி முபாரக் ராணுவத்துக்கு உத்தரவிட்டபடி இருந்தார்.

ஆனால் முபாரக் உத்தரவுக்கு கட்டுப்பட ராணுவம் திடீரென மறுத்து உள்ளது. பொதுமக்களை சுட முடியாது என்றும் ராணுவம் கூறிவிட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எகிப்து மக்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமக்கள் அவர்கள் சட்டப்பூர்வமாக போராடுகின்றனர். அவர்களுக்கு போராட உரிமை உள்ளது.

எங்கள் சொந்த நாட்டு மக்களை நாங்கள் தாக்கமாட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது. ராணுவமும் மக்கள் பக்கம் சாய்ந்துவிட்டதால் முபாரக்கின் நிலைமை மோசமாகி உள்ளது. அவர் எந்த நேரத்திலும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்க போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முபாரக் முயற்சித்து வருகிறார்.

இது தொடர்பாக துணை அதிபர் உமர் சுலைமான் டெலிவிஷனில் தோன்றி வேண்டுகோள் விடுத்தார். “அதிபர் முபாரக் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறார். எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொள்ளலாம். அரசியல் சட்டம், சட்டவிதிகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம்.

பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்” என்று அவர் கூறினார். ஆனால் போராட்டகாரர்கள் சமாதானத்துக்கு தயாராக இல்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகியே ஆக வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அதிபர் உத்தரவுக்கு ராணுவம் கட்டுப்பட மறுத்துவிட்ட நிலையில் எதிர்கட்சியினரும் சமாதான பேச்சு நடத்த தயாராக இல்லாததால் முபாரக் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே முபாரக்கின் மனைவி சுஷானே (69) லண்டன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. லண்டனில் இவர்களுக்கு சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது.

இது ரூ.60 கோடி மதிப்புடையது. மனைவி சுஷானேயை தொடர்ந்து அதிபர் முபாரக்கும் திடீரென லண்டன் தப்பி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டக் கல்லூரி தேர்வு எழுத முடியாமல் திரும்பிய சவுந்தர்யா! ரசிகர்கள் தொந்தரவால் அதிருப்தி

Written on 5:44 AM by பூபாலன்(BOOBALAN)

ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார்.

சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார். அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார். பின்னர் அவர் அந்த கல்லூரி முதல்வரிடம் தேர்வு எழுத தனக்கு தனி அறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு கல்லூரி முதல்வர் மறுத்தார்.

பிரபலங்களின் வாரிசுகளுக்கு தேர்வு எழுத ஏற்கனவே தனி அறை ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து சவுந்தர்யா அவரிடம் வாதாடினார். ஆனால் அதை ஏற்க கல்லூரி முதல்வர் மறுத்து விட்டார். இதனால் அதிருப்தியுடன் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார்.

FeedBurner FeedCount

top

Back to Top
free counters

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket