**HI**FRIENDS**WELCOME TO MY BLOG**

திருப்பதிக்கே லட்டா-திருநெல்வேலிக்கே அல்வாவா ? தே.மு.தி.க.,வுக்கே சவாலா? விஜயகாந்த் விர்ர்ர்..,

Written on 4:50 AM by பூபாலன்(BOOBALAN)

சென்னை: சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தும், முதல்வர் ஜெ.,வும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் காரசார விவாதம் நடந்தது. இதில் தேர்தலில் தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா என்று ஜெ., எழுப்பிõனார். யார் கூட்டணியால் யார் ஜெயித்தார் என விவாதம் நடந்தது. சபையில் அநாகரிகமாக நடந்து கொண்டதையடுத்து சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உரிமை மீறல் குழு முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் விஜயகாந்த் ஆஜராகவில்லை இதனையடுத்து விஜயகாந்த் சபையில் பங்கேற்க 10 நாள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சபையில் நடந்தது என்ன என்பது குறித்தும், அ.தி.மு.க.,வுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர்கள்தான் என்னை அழைத்தார்கள் என்றும் தே.மு.தி.க., அலுவலகத்தில் இன்று மதியம் விஜயகாந்த், நிருபர்களிடம் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில்: சபையில் நாங்கள் மக்கள் பிரச்சனைகளை பேசினோம். ஆனால் இதற்கு அனுமதி தரப்படவில்லை. கையை நீட்டி பேசியது தவறு என்றால் எல்லோரும் கை நீட்டி தான் பேசுகின்றனர். எங்களுடன் கூட்டணி வைத்தது அருவருப்பாக இருக்கிறதாம், ஏன் உங்களை பார்க்கவும் அருவருப்பாகத்தான் இருக்கிறது.


நாங்கள் பொறுமையாக இருக்கவில்லையா ? யாருக்கு ஏறுமுகம், இறங்கு முகம் என்று நீங்கள் சொல்லக்கூடாது மக்கள் சொல்ல வேண்டும். சபை நடவடிக்கைகள் அனைத்தையும் எடிட் செய்யாமல் ஒளிபரப்பிட தயாரா ? இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றிபெறும் என்பது நடந்திருக்கிறது. நியாயத்தை பற்றி இவர்கள் பேசுகிறார்கள். நான் கட்சியை துவக்கி 13 முறை இடைத்தேர்தலை சந்தித்தவன். நீங்கள் தான் அச்சப்படுகிறீர்கள். நான் தலை குனிந்தாலும் மக்கள் தலைகுனிய விட மாட்டேன். எம்.ஜி.ஆர்.,காலத்தில் இருந்து கூட்டணி வைத்துதான் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். ஊர் கூடி தேர் இழுத்தோம். இதனால் கூட்டணி சேர்ந்தோம். தொண்டர்கள் என்ன விரும்புகின்றார்களோ அதன்படிதான் நாங்கள் கூட்டு வைப்போம். 5 ஆண்டுகாலம் அரசியலில் இடைத்தேர்தல் நாயகன் ( அழகிரி) நிலை என்னவாச்சு ? இப்போது அழகிரி எங்கே இருக்கிறார். சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சு: சட்டம் ஒழுங்கு கெட்டு போய் குட்டி சுவராக இருக்கிறது. தேவைப்பட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். இப்போது தான் விஜயகாந்த் வந்திருக்கான் போகப்போக புரியும். ஜெயலலிதா திருந்தி விட்டார் என நிவைத்தேன் ஆனால் திருந்தவில்லை. இந்த அம்மா இன்னும் திருந்தவில்லை. ஆணவம் குறையவில்லை. மமதை போக்குடன் இருந்து வருகிறார். பழைய குருடி, கதவை திறடி என்ற கதையாகிப்போச்சு. நாளுக்கு நாள் ஒரு அமைச்சர் நீக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ராஜினாமா செய்யத்தயார் : அ.தி.மு.க,.வுடன் கூட்டணி வைத்ததற்கு ராஜிவ் முதல் வாஜ்பாய் வரை கவலைப்பட்டனர். கேவலப்பட்ட அரசுக்கு மத்தியில் எங்களை உட்கார வைத்து விட்டார்களே என நாங்கள் இவர்களுடன் கூட்டணி வைத்தமைக்கு வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். இன்றைக்கு மக்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்து விட்டார்களோ அன்றைக்கு ஆட்சி சரியில்லை என்றுதான் அர்த்தம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நியாத்திற்காக போராடுவேன், என்னை மிரட்டி பணிய வைக்க நினைத்தால் அதுநடக்காது. பேசனுமின்னா நிறைய பேச வேண்டியது வரும். பேசக்கூடாது என இருக்கிறேன். தி.மு.க.,வும்,. அ.தி,மு.க.,வும் ஒழுங்கா ஆட்சி செய்திருந்தால் நாங்கள் ஏன் கட்சியை துவக்க வேண்டும் ? நாங்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட தயார், நீங்கள் தயாரா, கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து தேர்தலை சந்திக்க தயாரா? என்னுடன் கூட்டணி வைக்க ஜெ., போட்ட டூர் எல்லாம் கேன்சல் பண்ணினார்கள். என்னுடைய சவாலை ஏற்க தயாரா? மதுரைக்கே மல்லிகை பூவா ? திருநெல்வேலிக்கே அல்வாவா, திருப்பதிக்கு லட்டா, தே.மு.தி.க.,வுக்கே சவாலா என்றார். அடுத்த தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று நாங்கள் தான் ஆளும் கட்சியாக வருவோம் தொடர்ந்து கூட்டணி தர்மம் மீறிவிட்டதாக கூறப்படுகிதே என்று நிருபர்கள் கேட்டதற்கு கூட்டணி தர்மம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்றார்.

ஆசிரியர்கள் நியமனம்

Written on 10:47 AM by பூபாலன்(BOOBALAN)


பூபாலன்

கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு லேப்டாப்-23-06-2011

Written on 10:25 PM by பூபாலன்(BOOBALAN)

தமிழகத்தில் இந்த ஆண்டில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2 மற்றும் 3ம் ஆண்டுகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் 1 மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு "லேப்டாப்கள்" வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் 9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்கள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்படி இந்த ஆண்டு முதற்கட்டமாக பள்ளிகளை பொறுத்தவரை பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கும், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளை பொறுத்தவரை முதல் மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும், இன்ஜினியரிங் கல்லூரிகளை பொறுத்தவரை 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும் லேப்டாப்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் 2ம் ஆண்டு மாணவ, மாணவிகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, 4ம் ஆண்டு மற்றும் 5ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும் படிப்படியாக லேப்டாப்கள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் விபரங்களை அரசு சேகரித்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் விபரங்கள் குறித்து கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டில் லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளின் பட்டியல் குறித்த கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் புள்ளி விபர பட்டியல் சேகரிக்கும் பணி நடக்கிறது. இப்பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் மாவட்ட வாரியாக இந்த ஆண்டில் லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளின் பட்டியல் தயாரிக்கப்படும். தொடர்ந்து மாநில அளவில் இப்பட்டியல் தொகுக்கப்படும். தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் இம்மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்கள் வழங்கும் திட்டம் துவக்கப்படும்.

இந்த லேப்டாப்களை தரமானதாகவும், மானிட்டர், டிவிடி ரைட்டர், வயர்லெஸ், ஹார்ட் டிஸ்க், கேமிரா உட்பட பல்வேறு வசதிகளுடன், அதிக திறன் கொண்டதாக இருக்கும் வகையில் கொள்முதல் செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அணு உலைகள் பாதிப்பால் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம்! ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்

Written on 11:09 PM by பூபாலன்(BOOBALAN)

http://tamilcnn.com/images/stories/tamilcnn/march-2011/tech/tsunami-hits-japan-video.jpg 
ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் மற்றும் பசுபிக் கடலை அண்டிய சுமார் 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா, நியூசிலாந்து தைவான், பெரு, சிலி அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி, மெக்ஸிகோ, மற்றும் மத்திய, தென் அமெரிக்க பகுதிகள் உள்ளிட்ட 20 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுனாமி ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடுமாறு அலாஸ்கா பகுதியின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அவசரகால மேலாண்மை இயக்குநர் ஜான் மேடன் தெரிவித்தார்.

இதேவேளை ஹவாய் தீவுப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இன்று இந்தோனேசியா நியூசிலாந்து ஆகிய நாடுகளை ஆழிப்பேரலை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
http://tamilcnn.com/images/stories/tamilcnn/march-2011/tech/atomic4.jpg 

ஜப்பான் பூகம்பம், சுனாமியால் அணு உலைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன அங்குள்ள புகுசிமா மாவட்டத்தில் 5 இடங்களில் அணு உலைகள் இருந்தன.

இந்த 5 அணு உலைகளுமே பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.அதில் ஒரு அணு உலையில் அதிக அளவில் கடல் நீர் புகுந்து விட்டது.

இதனால் அணு உலை குளிர்படுத்தும் அமைப்பு முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதில் இருந்து அணுக்கதிர் வீச்சு கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

எனவே அந்த பகுதியில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் 3000 ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப் பட்டு உள்ளனர்.

அதே போல மற்ற அணு உலைகளிலும் கசிவு ஏற்படலாம் என கருதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டு உள்ளது.

அணுகதிர் வீச்சு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 5 அணு உலைகளிலும் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் ஜப்பானில் பெரிய அளவில் மின் துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.



ஜப்பானை புரட்டி போட்டது; தி.மு.க.,வை கலங்கடித்தது

Written on 10:16 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_204037.jpg 
சென்னை : ஜப்பான் நாட்டில் நேற்று சுனாமி தாக்கிய அதே நேரத்தில், சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்துக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் புகுந்தனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், "கலைஞர் டிவி'யின் பங்குதாரர்களான தயாளு, கனிமொழி எம்.பி., ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கீழ்தளத்தில் கட்சியிருடன் அப்போது நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. தி.மு.க., அலுவலகத்துக்குள்ளேயே சி.பி.ஐ., இரண்டாவது முறையாக புகுந்தது, தி.மு.க., வட்டாரத்தை கலங்கடித்துள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தொடர்பான ஏலத்தில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி, மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அத்துறையின் மத்திய அமைச்சராக இருந்த தி.மு.க.,வின் ராஜா, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ராஜாவிடம் நடத்திய விசாரணையில், "டி.பி. ரியாலிட்டி' நிறுவனத்தின் உரிமையாளரான சாகித் உஸ்மான் பல்வாவை கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக ஆளுங்கட்சி தி.மு.க.,வின், "கலைஞர் டிவி'யில் 214 கோடி ரூபாய் முதலீடு செய்த தகவல் கிடைத்தது. "கலைஞர் டிவி'யைப் பொறுத்தவரை, முதல்வரின் மனைவி தயாளுவுக்கு 60 சதவீத பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், அதன் மேலாண் இயக்குனரான சரத் ரெட்டிக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. "கலைஞர் டிவி'க்கு எந்த வகையில் முதலீடு செய்யப்பட்டது என்பது தொடர்பாக கேள்விகள் எழுந்தன.இந்நிலையில், அந்த தொகையை கடனாக பெற்றதாகவும், 30 கோடி ரூபாய் வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்தில் வந்து சோதனையிடலாம் என்றும், "டிவி' நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக இம்மாதம் 31ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, தற்போது சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

"கலைஞர் டிவி' விவகாரத்தை தாண்டி, கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க சி.பி.ஐ., முடிவெடுத்து, அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. இதே சூழலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்னைகளும் எழுந்தன.இப்பிரச்னை அடங்கிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், "கலைஞர் டிவி' பங்குதாரர்களுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. அதில், நேற்று காலை "கலைஞர் டிவி' அலுவலகத்தில் விசாரணை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில், "கலைஞர் டிவி' அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தி.மு.க., வேட்பாளர்கள் நேர்காணல், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் வேளையில், நேற்று காலை 8.45 மணிக்கு திடீரென, டில்லி சி.பி.ஐ., பெண் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள், சென்னை சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் உதவியுடன் நுழைந்தனர்.அப்போது, "டிவி'யின் மேலாண் இயக்குனர் சரத் ரெட்டி இருந்தார். கனிமொழி, தயாளு இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, 10.15 மணிக்கு கனிமொழியும், 10.30 மணிக்கு தயாளுவும், "டிவி' அலுவலகத்திற்குள் நுழைந்தனர். திட்டமிட்டபடி, காலை 11 மணிக்கு, தயாளுவிடம் விசாரணை துவங்கியது. ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில், "டிவி'க்கு முதலீடு பெற்ற விதம், செலுத்தப்பட்ட வட்டித் தொகை எங்கிருந்து வந்தது என்பதற்கான விளக்கங்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. பிற்பகல் 12.15 மணிக்கு விசாரணை முடிந்து, தயாளு புறப்பட்டார். அடுத்ததாக, கனிமொழியிடமும், தொடர்ந்து சரத் ரெட்டியிடமும் விசாரணை நடந்தது. பகல் 2.10 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.ஐ., அதிகாரிகள், 2.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். விசாரணையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தாலும், தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் இன்னும் தி.மு.க., - காங்கிரஸ் இடையில் முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், சி.பி.ஐ.,யின் இந்த விசாரணை நடவடிக்கை, தி.மு.க.,வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ.,யின் அடுத்த கட்ட, "மூவ்' என்ன என்பது, யாருக்கும் தெரியாத நிலையில், என்ன நடக்குமோ என அனைத்து தரப்பும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. சுனாமி போல் "2ஜி' விவ காரம் தி.மு.க.,வை தாக்குவதால், கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

ஜப்பானை புரட்டி போட்டது:டோக்கியோ : ஜப்பானின் சமீபத்திய வரலாற்றில், இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரழிவில், அந்நாட்டின் வட கிழக்குப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொடர்ந்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிலநடுக்கப் பகுதியில் தான் ஜப்பான் அமைந்துள்ளது. பூமிக்கடியில் உள்ள யூரேஷியன், பசிபிக் மற்றும் பிலிப்பைன்ஸ் கண்டத் திட்டுகள் ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ளது ஜப்பான் தலைநகர் டோக்கியோ. இதனால், நிலநடுக்கம் ஜப்பானுக்கு வழக்கமானதே. மேலும் அங்கு எரிமலைகளும் அதிகம்.டோக்கியோ உள்ளிட்ட ஏழு பகுதிகள் அடங்கிய கான்ட்டூ பிராந்தியம், ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் அளவிலான நிலநடுக்கத்திற்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்ட பகுதி.பயங்கர நிலநடுக்கம்: கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. முதல் நாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து கடலில் இரண்டடி உயரமுள்ள சுனாமி ஏற்பட்டது. இரண் டாவது நாளில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.அதே நேரம், ஜப்பானின் வடகிழக்குப் பகுதி, சீனாவின் தென்பகுதி, பாப்புவா நியூகினியா நாடு ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், டோக்கியோவில் இருந்து 400 கி.மீ., தொலைவில் வடகிழக்குப் பகுதியில் கடலில் நேற்று, இந்திய நேரப்படி முற்பகல் 11.16 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையோர நகரான செண்டாயில் இருந்து 81 மைல் தொலைவில் கடலில், 15 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவுகோலில் பின்னர் 8.9 புள்ளிகள் பதிவானது.செண்டாய், புக்குஷிமா பகுதிகள் துவங்கி தென்பகுதியில் டோக்கியோ மற்றும் வடபகுதியில், ஐவேட் மாகாணம் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது.

மக்கள் அலறல்: டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதும், மக்கள் வீடுகளை விட்டு தெருக்களுக்கு வந்தனர். அவசரமாக எச்சரிக்கை சங்கும் ஒலித்தன. டோக்கியோ தெருக்களில் உள்ள 24 மணி நேர கடைகளில் சாண்ட் விச், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், குளிர்பானங்களை அவசரமாக வாங்கி கடையை காலி செய்தனர். கடைகளில் ஏற்பட்ட அதிர்ச்சியில் அங்கிருந்த பீங்கான் பொருட்கள் உடைந்து சிதறி குவியலாக இருந்தது. அவசர அவசரமாக அரசு அறிவிப்புகள் ஒலிபரப்பப்பட்டன. அலுவலகத்தில் இருந்து எல்லாரும் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். நெரிசலை தவிருங்கள். இரவு நேரம் வந்து விடும் என்பதால், பாதுகாப்பான இடங்களில் அல்லது அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

சுனாமி பேரழிவு: இந்நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி உருவானது. 10 மீ., (33 அடி) உயரத்துக்கு உருவான அலை, ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை கடும் வேகத்தில் வந்து தாக்கியது. தொடர்ந்து செண்டாய், புக்குஷிமா பகுதிகளுக்குள் அலை சீறிப் பாய்ந்தது.கார்கள், லாரிகள், படகுகள், கப்பல்கள், கட்டடப் பகுதிகள் என அனைத்தும் பொம்மைகளைப் போல சுனாமியில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டன. இந்தப் பயங்கரக் காட்சியை, "டிவி'யில் பார்த்த பலரும் மிரண்டனர். செண்டாய் மற்றும் டோக்கியோவின் புறநகர்ப் பகுதி உட்பட 80 பகுதிகளில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.செண்டாய் நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த பண்ணைகள் அனைத்தும் சுனாமி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. சுனாமி ஏற்பட்ட பின்னும் நிலநடுக்கம் பல முறை நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக துவங்கிய நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இனிமேல் தெரியவரும்.

அணு உலைகள் மூடல்: தொடர்ந்து நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள அணு உலைகள் அனைத்தும் மூடப்பட்டதாக அரசு அறிவித்தது. அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளியாகவில்லை என்று பிரதமர் நவோட்டா கான் தெரிவித்துள்ளார். எனினும், அணு உலைகள் இருக்கும் பகுதிகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. டோக்கியோ விமான நிலையம் மூடப்பட்டதால் விமானப் போக்குவரத்து தடைபட்டது.இந்நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஜப்பானின் அதே பகுதியை தாக்கக் கூடும் என்று நிலவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை : சுனாமியால் இந்தியாவுக்கும், ஜப்பானில் வாழும் இந்தியர்களுக்கும் ஆபத்து எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. இருந்தாலும், அந்த மையம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. ஜப்பானை பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கியது, 2004ல் இந்தியாவின் பல பகுதிகளை சுனாமி ஆழிப் பேரலை தாக்கியதை நினைவுபடுத்தியுள்ளது.டோக்கியோ அருகில் உள்ள கான்டூ மற்றும் கான்சாய் பகுதிகளில் வசிக்கும் 25 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை. இந்த பேரிடர் பாதிப்பில் இந்தியா உதவிக்கரம் நீட்ட தயார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி கூறுகையில், ""இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. இந்திய கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கும் என்ற அச்சமும் தேவையில்லை. அதேநேரத்தில், பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளன,'' என்றார்.கடந்த 2004ம் ஆண்டில் சுனாமி தாக்கிய போது, இந்தோனேசியா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அ.தி.மு.க., கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி: ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு

Written on 5:17 AM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_203313.jpg 
ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில், சுமுக முடிவு எட்டப்படாததால், அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் ம.தி.மு.க., போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ம.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகி யோர் தி.மு.க.,விற்கு தாவினர். திருமங் கலம் எம்.எல்.ஏ.,வாக இருந்த வீரஇளவரசன் மரணம் அடைந்தார். தற்போது மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் ம.தி.மு.க.,வில் உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் நான்கு இடங்களைப் பெற்ற ம.தி.மு.க., ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த ஐந்தாண்டுகளாக பல்வேறு பிரச்னைகளில், அ.தி.மு.க., எடுக்கும் முடிவையே ம.தி.மு.க., பின்பற்றியது. ஆளுங்கட்சியை எதிர்ப்பதிலும், தோழமை கட்சியை ஆதரிப்பதிலும் ம.தி.மு.க., உறுதியாக இருந்தது. அத்தகைய கட்சிக்கு தற்போது தொகுதி பங்கீடு விவகாரத்தில் புயல் வீச ஆரம்பித்துள்ளது.

அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் முதல் கட்டம், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் 35 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் கேட்டனர். இதற்கு எந்த பதிலும் அ.தி.மு.க., தரப்பில் தரப்படவில்லை. மூன்றாவது கட்டமாக 25 தொகுதிகளாவது கிடைக்கும் என, ம.தி.மு.க.,வினர் எதிர்பார்த்து உடன்பாடு ஒப்பந்தத்திற்கு அழைப்பார்களா என காத்திருந்தனர். ஆனால், 10 முதல் 12 தொகுதிகளே ஒதுக்க முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வைகோ அதிர்ச்சி அடைந்தார். குறைந்த தொகுதி எண்ணிக்கை முடிவை அவரால் நம்ப முடியவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய குழுவின் தலைவரும், திருப்பூர் மாவட்டச் செயலருமான ஆர்.டி.மாரியப்பன், தன் சொந்த ஊருக்கு விரக்தியோடு புறப்பட்டுச் சென்றார். குறைந்த தொகுதிகளை பெற, ம.தி.மு.க., தயாராக இல்லை. குறைந்தபட்சம் 21 தொகுதிகளாவது ஒதுக்கீடு செய்தால் தான் ஒப்பந்தத்தில் வைகோ கையெழுத்திடுவார் என்று ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை பொறுமையாக இருக்கவும், அ.தி.மு.க., தலைமையிடமிருந்து நல்ல முடிவுக்காக வைகோ காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சி 18 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளது. ஆனால், 11 தொகுதிகள் மட்டுமே தர அ.தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூ.,வும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு இணையாக 18 தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளது. ஆனால், இந்திய கம்யூ., கட்சிக்கு ஒன்பது தொகுதிகள் மட்டுமே தர முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் ஒரே தொகுதிகளைக் கேட்பதால், அந்தச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. எனவே, இரு கம்யூ.,கட்சிகளும் தங்களுக்குள் பேசி, ஒரு சுமுக முடிவுடன் வரும்படி அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. இறுதியில், மார்க்சிஸ்ட் கட்சி 14 தொகுதிகளுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 தொகுதிகளுக்கும் இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கையை மேலும் குறைப்பது குறித்து பேச்சு நடப்பதால் அ.தி.மு.க., கூட்டணியில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது முடிவு அ.தி.மு.க., கையில் உள்ளதாக கம்யூனிஸ்டுகள் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க.,வின் முடிவைப் பொறுத்து, எந்த நேரமும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

அ.தி .மு .க வை சந்திக்கிறது தே .மு. தி. க

Written on 11:47 PM by பூபாலன்(BOOBALAN)

http://epaper.dinamalar.com/DM/MADHURAI/2011/02/02/Article//001/02_02_2011_001_005.jpg

எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட இராணுவம் மறுப்பு; முபாரக் ஆட்சி கவிழும் ஆபத்து

Written on 5:45 AM by பூபாலன்(BOOBALAN)

எகிப்து நாட்டின் அதிபராக ஹோஸ்னி முபாரக் 30 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார். இவரது நீண்ட கால ஆட்சியில் எகிப்து பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது.

மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. விலைவாசி மிகவும் உயர்ந்து விட்டது. எனவே முபாரக் பதவி விலக வேண்டும் என மக்கள் வன்முறை போராட்டத்தில் குதித்தனர்.

இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக வெடித்தது. இன்று 8-வது நாளாக கலவரம் நீடித்து வருகிறது. தலைநகர் கெய்ரோ மட்டுமின்றி அலெக்சாண்ட்ரியா உள்பட நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருந்தும் கலவரம் ஓய்ந்தபாடில்லை.

மக்களை அமைதிப்படுத்த ஏற்கனவே இருந்த மந்திரி சபையை அதிபர் முபாரக் கலைத்துவிட்டார். புதிய இடைக்கால மந்திரி சபையை அமைத்துள்ளார். இருந்தும் மக்கள் அமைதியாகவில்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின் றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார்.

இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் அறிவித்து பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர்.

மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை முபாரக் ஏவிவிட்டார். ராணுவ டாங்கிகள், பீரங்கி வண்டிகள், தெருக்களில் நிறுத்தப்பட்டன எந்திர துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்கள் ஆங்காங்கே தயாராக நின்றனர். போராட்டகாரர்களை ஒடுக்கும்படி முபாரக் ராணுவத்துக்கு உத்தரவிட்டபடி இருந்தார்.

ஆனால் முபாரக் உத்தரவுக்கு கட்டுப்பட ராணுவம் திடீரென மறுத்து உள்ளது. பொதுமக்களை சுட முடியாது என்றும் ராணுவம் கூறிவிட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எகிப்து மக்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமக்கள் அவர்கள் சட்டப்பூர்வமாக போராடுகின்றனர். அவர்களுக்கு போராட உரிமை உள்ளது.

எங்கள் சொந்த நாட்டு மக்களை நாங்கள் தாக்கமாட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது. ராணுவமும் மக்கள் பக்கம் சாய்ந்துவிட்டதால் முபாரக்கின் நிலைமை மோசமாகி உள்ளது. அவர் எந்த நேரத்திலும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்க போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முபாரக் முயற்சித்து வருகிறார்.

இது தொடர்பாக துணை அதிபர் உமர் சுலைமான் டெலிவிஷனில் தோன்றி வேண்டுகோள் விடுத்தார். “அதிபர் முபாரக் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறார். எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொள்ளலாம். அரசியல் சட்டம், சட்டவிதிகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம்.

பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்” என்று அவர் கூறினார். ஆனால் போராட்டகாரர்கள் சமாதானத்துக்கு தயாராக இல்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகியே ஆக வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அதிபர் உத்தரவுக்கு ராணுவம் கட்டுப்பட மறுத்துவிட்ட நிலையில் எதிர்கட்சியினரும் சமாதான பேச்சு நடத்த தயாராக இல்லாததால் முபாரக் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே முபாரக்கின் மனைவி சுஷானே (69) லண்டன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. லண்டனில் இவர்களுக்கு சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது.

இது ரூ.60 கோடி மதிப்புடையது. மனைவி சுஷானேயை தொடர்ந்து அதிபர் முபாரக்கும் திடீரென லண்டன் தப்பி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டக் கல்லூரி தேர்வு எழுத முடியாமல் திரும்பிய சவுந்தர்யா! ரசிகர்கள் தொந்தரவால் அதிருப்தி

Written on 5:44 AM by பூபாலன்(BOOBALAN)

ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார்.

சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார். அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார். பின்னர் அவர் அந்த கல்லூரி முதல்வரிடம் தேர்வு எழுத தனக்கு தனி அறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு கல்லூரி முதல்வர் மறுத்தார்.

பிரபலங்களின் வாரிசுகளுக்கு தேர்வு எழுத ஏற்கனவே தனி அறை ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து சவுந்தர்யா அவரிடம் வாதாடினார். ஆனால் அதை ஏற்க கல்லூரி முதல்வர் மறுத்து விட்டார். இதனால் அதிருப்தியுடன் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார்.

ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜ்யம் இல்லை ஆள..,சி.பி.ஐ.,விசாரணை முடிந்து சென்னை திரும்புகிறார்

Written on 10:54 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_154864.jpg 
சென்னை: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான சி.பி.ஐ., விசாரணை முடித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று மதியம் 1 மணி அளவில் சென்னை வருகிறார். முதல்வர் கருணாதியின் தோள்கொடுக்கும் உற்றவராக இருந்த ராஜா தற்போது முறைகேட்டில் சிக்கி தனது தலைவரிடம் இருந்த முக்கியத்துவத்தை இழந்துள்ளார்.

நாடு அளவில் பெரும் எதிர்ப்பு கிளப்பிய எதிர்கட்சிகளின் பிரசாரத்துக்கு தி.மு.க., வினால் ஈடு கொடுக்க முடியாமல் போனது என்பதுதான் <உண்மை. இதற்கு ஒரு சான்றாக பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் முழுமையாக முடங்கிப்போனது.

இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்று இதன் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. கோர்ட்டின் அதிரடி கேள்விகளால் சி.பி.ஐ., தனது பணியை வேகப்படுத்தியது.ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராஜா, நீரா ராடியா மற்றும் முக்கியஸ்தர்கள் உறவினர்கள் என பலரது அலுவலகம், வீடுகளில் ரெய்டு நடத்தினர். இதில் முக்கிய ஆவணஙகள் சிக்கியதாக தெரிகிறது.
இதன் அடிப்படையில் சி.பி.ஐ., அதிகாரிகள் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் நீரா ராடியாவுடன் நேரடி விசாரணை நடத்தியிருக்கிறது. ராஜாவிடம் மட்டும் 2 நாள் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 2 நாள் விசாரணையை முடித்து அவர் சென்னை திரும்புகிறார்.காலை11 மணி அளவில் வருவார் என முதலில் கசிந்தது, தற்போது மதியம் 1 மணி அளவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.விசாரணை குறித்து இது வரை நிருபர்களிடம் கருத்து எதுவும் தெரிவிக்காத ராஜா இன்று ஏதும் சொல்வார் என தெரிகிறது. ராஜாவிடம் மீண்டும் சி.பி.ஐ., விசாரணை நடத்தலாம் என்றும் டில்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் மாற்றம்: ஜெயலலிதா நடவடிக்கை

Written on 4:45 AM by பூபாலன்(BOOBALAN)





 
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
 
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பொறுப்பில் இருக்கும் பி.கிருஷ்ணன், செயலாளர் பொறுப்பில் இருக்கும் குப்புசாமி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
 
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். தர்மபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி மாவட்ட துணை தலைவராக பி.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக டி.ஆர். அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
 
கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் கே.பி.முனுசாமி, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.வி. ராஜேந்திரன் ஆகியோரும் இன்றுமுதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
 
கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி நியமிக்கப்படுகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொறுப்பில் சி.வி. ராஜேந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் எழ முடியாத அளவு தி.மு.க.,விற்கு அடி :ஜெயலலிதா

Written on 11:32 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_152484.jpg 

சென்னை : ""அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நடைபெறும் யுத்தம், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம். இந்த முறை நம்முடைய தாக்குதல் வலுவாக இருக்க வேண்டும். எதிரி மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவிற்கு நம்முடைய அடி மரண அடியாக இருக்க வேண்டும்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆவேசத்துடன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 23ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று காலை மலர் அஞ்சலி செலுத்தினார். இதில், ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில், ஜெயலலிதா பேசியதாவது:மறைந்த பின்னரும் மறக்க முடியாத மாமனிதராய், தமிழக மக்கள் நினைவில் நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரின் நினைவு நாளன்று ஒவ்வொரு ஆண்டும் நாம் இங்கு கூடி வருகிறோம். இந்த முறை விரைவில் தமிழக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில் நாம் இங்கே குழுமியிருக்கிறோம்.கருணாநிதியை அரசியலிலிருந்து ஒழித்துக் கட்ட அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., நிறுவினார். எம்.ஜி.ஆரால், சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதை கேலியும், கிண்டலும் செய்தார் கருணாநிதி. அத்திட்டத்தை கருணாநிதியால் இன்று வரை தவிர்க்க முடியவில்லை.அதேபோல, நான் கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டத்தையும், இலவச பாடநூல் திட்டத்தையும் கருணாநிதியால் இன்று வரை தவிர்க்க முடியவில்லை.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல இலவச திட்டங்களை அறிவித்து மைனாரிட்டி அரசை அமைத்தார் கருணாநிதி. "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என நான் அறிவித்தேன். கருணாநிதி, "எங்கும் ஊழல், எதிலும் ஊழல்' என அதை மாற்றிவிட்டார். இந்த ஆட்சி ஆறரை கோடி தமிழக மக்களுக்காக நடக்கும் ஆட்சியா? அல்லது பரந்து விரிந்த கருணாநிதியின் குடும்பத்திற்காக நடக்கும் ஆட்சியா? என மக்கள் கேட்கும் அளவு ஒரு அலங்கோல ஊழல் ஆட்சி தற்போது தமிழகத்தில் நடக்கிறது. ஆறரைக் கோடி மக்களை வேதனையில் தள்ளி, ஒரு குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, மணல், கிரானைட் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரிச் சீட்டு விற்பனை, நில அபகரிப்பு, திரைப்படத் துறையை கபளீகரம் செய்தது, சட்டம் ஒழுங்கு சீரழிவு, கொலை, கொள்ளையர்களுக்கு துணை போவது என சகலவித மக்கள் விரோத நடவடிக்கைகள் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தமிழக மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.பத்திரிகைகள், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் "2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஈடுபாடு குறித்து வெளிச்சம்போட்டு காட்டியுள்ளன.

இதன்மூலம், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் தலைகுனிவை ராஜா மூலம் ஏற்படுத்தியுள்ளார் கருணாநிதி.அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நடக்கும் யுத்தம், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம். எம்.ஜி.ஆர்., தீயதியை மூன்று முறை வீழ்த்தி ஆட்சி அமைத்தார். நான் இரண்டு முறை அதே தீயதியை வீழ்த்தி ஆட்சியமைத்தேன்.தீயதியை நிரந்தரமாக அரசியலில் இருந்து, இதுவரை அகற்ற முடியவில்லை. எதிரிகளை தாக்குவதில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. லேசாக தாக்கினால் தள்ளாடுவர். சற்று பலமாக தாக்கினால், கீழே விழுந்து விடுவர்; ஆனால், மீண்டும் எழுந்து விடுவர்.

இந்த முறை நமது தாக்குதல் வலுவாக இருக்க வேண்டும். எதிரி மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவிற்கு நமது அடி மரண அடியாக இருக்க வேண்டும்.வரும் 2011ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைக்கப் போவது உறுதி. அந்த அளவிற்கு தி.மு.க., மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினர் துணிவோடு பணியாற்ற வேண்டும். நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. உங்களுக்கு வழிகாட்டியாக உங்களுக்கு முன்னால் நான் செல்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பொன்னையன் உறுதிமொழிவாசகங்களை வாசிக்க, திரண்டிருந்த கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்

Written on 4:44 AM by பூபாலன்(BOOBALAN)


 

""தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருப்பதை நான் விரும்பவில்லை; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்; காங்., தலைமையில் முதல்வர் பதவிக்கு வர வேண்டும்; அதற்கு கிராம அளவில் காங்கிரசை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்,'' என காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் யோசனை தெரிவித்துள்ளார்.
http://img.dinamalar.com/data/large/large_151830.jpg  தமிழகத்தில் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், நேற்று இரண்டாவது நாளாக திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி ஆகிய ஊர்களில் நடந்த இளைஞர் காங்., ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டங்களில் ராகுல் பேசியதாவது: காங்., பேரியக்கம், 125 ஆண்டு கால வரலாறு மிக்க மாபெரும் இயக்கம். கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பில் இல்லை. தமிழகத்தில் காங்., ஆட்சியமைக்கும் வலுவான நிலையை ஏற்படுத்த வேண்டும். தன்னிச்சையாக அது அமையாமல், காங்., ஆட்சியை ஏற்படுத்தும் வகையில், நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தமிழகம், இளைய தலைமுறையின் கைகளுக்கு வர வேண்டும். அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் நிச்சயம் ஏற்படும்.

தமிழகத்தில் இரண்டாம் நிலையில் காங்., இருப்பதை நான் விரும்பவில்லை. காங்., தலைமையில் முதல்வர் வர வேண்டும். தமிழக அரசியலில், சட்டசபை, லோக்சபா பொறுப்புகளில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், மிக முக்கியமான கிராமங்களில், ஊராட்சிகளில் நாம் கவனம் செலுத்த தவறிவிட்டோம். தமிழகத்தில் அனைத்து மக்களிடத்திலும், எல்லா இடங்களிலும் காங்கிரஸ் என்ற நிலையை ஏற்படுத்தினால், அதற்கேற்ப செயல்பட்டால் தான் ஆட்சிக்கு வர முடியும். கிராமப்புற மக்களுக்காக பாடுபட வேண்டும்; அவர்களின் பிரச்னைகளை கையில் எடுத்து போராட வேண்டும். அப்படிபட்ட நிலையில் மக்களின் ஆதரவை பெற்றால், ஆட்சிப் பொறுப்பை மற்ற யாராலும் வெல்ல முடியாது. அடுத்த கட்டமாக, ஊராட்சிகளில், வார்டுகளில் இளைஞர் காங்கிரசார் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் ஊராட்சிகளில் தலைமை பொறுப்புகளுக்கு வர வேண்டும். அப்படிபட்டவர்களுக்கு சட்டசபை, லோக்சபா மற்றும் தமிழக அளவில் முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளைத் தருவது என் வேலை.

காந்திஜி, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை நினைவு கூர்வது மட்டும் போதாது; அத்தலைவர்களின் கடமைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களோடு ஒன்று கலந்து வாழ்ந்தனர். நேற்றிரவு, கக்கன் வாழ்ந்த சிறிய வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவரது வாழ்க்கை வரலாறு தெரிந்தது. காமராஜர் பற்றி சினிமா, புத்தகத்தில் தான் அறிந்திருக்கிறோம். அந்த மாபெரும் தலைவர் இறந்தபோது, அவரிடம் 132 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. அப்படிபட்ட தியாக வரலாறாக, அவர்களது வாழ்க்கை இருந்திருக்கிறது. தமிழகத்தில் ஊராட்சி பொறுப்புகளில் நாம் வெற்றி பெற்றால், அடுத்த கட்டமாக முதல்வர் பதவி நம்மை தேடி வரும். இக்கூட்டத்துக்கு பெண்கள் குறைவாக வந்துள்ளனர்; அடுத்த முறை பெண்கள் கூட்டம் சரி பாதியாக இருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார். இரண்டு நாட்களாக எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை, ஆறு ஊர்களில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் சந்தித்து பேசினார். நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்றார். ராகுலின் இந்த இரண்டு நாள் பயணத்தால் தமிழக காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பேசும் படம்

Written on 10:08 PM by பூபாலன்(BOOBALAN)

வெங்காயத்தை இறக்குமதி செய்ய அவசரம் : மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

Written on 9:55 PM by பூபாலன்(BOOBALAN)

 

http://img.dinamalar.com/data/large/large_151192.jpgபுதுடில்லி : வெங்காயம் ஏற்றுமதிக்கு காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம் இறக்குமதி மீதான வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், வெங்காயம் இறக்குமதிக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி மத்திய வர்த்தக அமைச்சகத்தையும், பதுக்கல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
வெங்காய விலை உயர்வு அதிகரித்தது பிரதமரையும், அரசையும் கவலையுறச் செய்ததால், இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது, மத்திய அரசை கவலை யடைய செய்துள்ளது.சென்னையிலும் கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்றது. இதனால், வெங்காய விலையை கட்டுப்படுத்த, விரைவாக நடவடிக்கைகளை எடுக்கும்படி, மத்திய விவசாய அமைச்சகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டு கொண்டார். அதே நேரத்தில், வெங்காயம் விலை உயர்வையடுத்து, அதன் ஏற்றுமதிக்கு முதலில் ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்டது.தற்போது இந்த தடை, மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெங்காயம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெங்காயம் இறக்குமதிக்கு இதுவரை 5 சதவீதம் சுங்கவரியும், 4 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வரியானது உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்க விதிக்கப்படுவது.வெங்காயம் இறக்குமதி மீதான இந்த இரண்டு வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இறக்குமதி அதிகரித்து உள்நாட்டில் விலை குறையும் என, மத்திய நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா கூறியுள்ளார்.


இதற்கிடையில், வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.மேலும், வெங்காய விலை குறைய இறக்குமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படியும், மத்திய வர்த்தக அமைச்சகத்தை கேபினட் செயலர் சந்திரசேகர் கேட்டு கொண்டுள்ளார். மத்திய அரசின் கீழ் உள்ள ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் போன்ற அமைப்புகள் இறக்குமதியில் தீவிர முனைப்பை காட்டும்.மேலும், உற்பத்தி செய்யப் படும் இடத்திலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு வெங்காயத்தை விரைவாக கொண்டு செல்ல, ரயில்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், ரயில்வே வாரியத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.


மத்திய அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்ததன் பலனாகவும், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதாலும், மொத்த விலை குறைய துவங்கி விட்டது. நாட்டின் மிகப்பெரிய வெங்காய வர்த்தக மையமான நாசிக்கில், நேற்று வெங்காயத்தின் மொத்த விலை 42 சதவீதம் வரை குறைந்தது. டில்லியில் உள்ள சந்தைகளிலும் வெங்காயத்தின் மொத்த விலை 29 சதவீதம் வரை குறைந்தது.


நாசிக் வர்த்தக மையத்தில், நேற்று முன்தினம் ஒரு குவிண்டால் வெங்காயம் 5,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று 3,702 ரூபாயாக குறைந்தது. "புதிதாக விளைந்த வெங்காயமும் விரைவில் சந்தைக்கு வர உள்ளதால், அடுத்த ஏழு முதல் 10 நாட்களிலும் வெங்காயத்தின் சில்லறை விலை கணிசமாக குறையும்' என, மத்திய விவசாயத்துறை செயலர் பி.கே.பாசு கூறியுள்ளார்.வெங்காயத்தின் இந்த திடீர் விலை உயர்வுக்கு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் சில தென்மாநிலங்களில் அதிகளவு மழை பெய்து, பயிர்கள் பாதிக்கப்பட்டதே காரணம். அத்துடன் பதுக்கலும் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பாக்., வெங்காயம்: வெங்காய இறக்குமதியை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லை வழியாக, 450 டன் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே 13 லாரிகளில் லாகூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வெங்காயம் பஞ்சாப் வந்தடைந்துள்ளது.வெங்காய ஏற்றுமதி மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், "தாமதமான நடவடிக்கை. கறுப்பு சந்தை பேர்வழிகளை சரியான நேரத்தில் ஒடுக்க மத்திய அரசு தவறி விட்டது' என்றார்.

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் : வெங்காய விலை மக்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ள நிலையில், ஜாம்ஜெட்பூரில் உள்ள டயர் விற்பனையாளர் ஒருவர், "தங்கள் கடையில் டயர் வாங்கினால், ஐந்து கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும்' என, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதாவது லாரிக்கான டயர் வாங்கினால், ஐந்து கிலோ வெங்காயமும், காருக்கான டயர் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயமும் தரப்படும் என கூறியுள்ளார். சத்னாம்சிங் காம்பீர் என்ற பெயர் கொண்ட இவர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்படும், அகில இந்திய சீக்கிய மாணவர்கள் சம்மேளன தலைவராகவும் உள்ளார்.

தமிழுக்கு முன்னுரிமை: ஆங்கிலத்தில் உத்தரவு

Written on 11:09 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_150462.jpg

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு, ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க, அரசு சமீபத்தில் உத்தர விட்டுள்ளது. இதன்படி 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, செப்., 30 ல் அரசாணை வெளியிடப் பட்டது.ஆனால், இந்த உத்தரவு ஆங்கிலத்தில் உள்ளது. பல நூறு கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடு, ஐகோர்ட்டில் தமிழ், தமிழ் வழி பொறியியல் படிப்பு... என, அரசு "எதிலும் தமிழ்' என்ற கொள்கையை புகுத்தி வருகிறது. ஆனால், அரசின் உத்தரவுகளில் இன்னும் ஆங்கில ஆதிக்கமே உள்ளது.

தமிழ் வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்; இதை பலர் பின்பற்றுவதில்லை; இவர்கள் மீது என்ன நடவடிக்கை? என்பது குறித்து, அரசு குறிப்பிடவில்லை. தமிழில் கையெழுத்திட நாங்கள் கூறும் அறிவுரைகளை, மற்ற துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவதில்லை,'' என்றார்.

கூட்டணி தொடருமா? காங்கிரஸ் மவுனம்

Written on 11:05 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_150470.jpgபுதுடில்லி :தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால், நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டில், கூட்டணி விவகாரம் பற்றி தீர்மானம் எதுவும் நிறைவேற்றாமல் மவுனம் சாதித்துள்ளது காங்கிரஸ் தலைமை.

நடந்து முடிந்த காங்கிரஸ் ஆண்டு மாநாட்டில், பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ் தலைமை, கூட்டணி விவகாரம் குறித்து எவ்வித தீர்மானமும் நிறைவேற்றவில்லை.குறிப்பாக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய தி.மு.க., மற்றும் அவ்விவகாரத்தில் பார்லி கூட்டுக் குழு விசாரணை கோரி வரும் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் பற்றி எவ்வித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டில் சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால் தான் கூட்டணிக் கட்சிகள் பற்றி கருத்து ஏதும் குறிப்பிடாமல் காங்கிரஸ் மவுனம் சாதிப்பதாகக் கூறப்படுகிறது.இவை தவிர, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியிலும் அடுத்தாண்டில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன.

இது குறித்து மாநாட்டில் பேசிய சோனியா, "நாம் கூட்டணியில் இருக்கும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய நேரம் இது' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். உ.பி.,யைப் பொறுத்து தனித்துப் போட்டி என்று ஏற்கனவே பொதுச்செயலர் ராகுல் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேசும் படம்

Written on 10:36 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/uploads/WR_388610.jpeghttp://img.dinamalar.com/data/uploads/WR_551290.jpeg

புத்தாண்டு முதல் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்கிறது

Written on 11:56 PM by பூபாலன்(BOOBALAN)




http://img.dinamalar.com/data/large/large_149927.jpg


சர்வதேச அளவில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்ததன் விளைவாக, சமையல் காஸ் சிலிண்டர் விலையை ஜனவரி மாதம் முதல் 22 ரூபாய் வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. நாளை நடக்கவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பின், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தெற்காசிய நாடுகளில் இந்திய நுகர்வோர் தான் அதிகளவு எல்.பி.ஜி.,யை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். உள்நாட்டு தேவைக்காக, எண்ணெய் நிறுவனங்கள் ஆண்டுக்கு 30 லட்சம் டன் சமையல் காஸ் இறக்குமதி செய்கின்றன.
மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் ஒரு பிரிவான, பெட்ரோலிய திட்டமிடல் பகுப்பாய்வு குழு, 2010-2011ம் ஆண்டுக்கான எல்.பி.ஜி.,யின் தேவை ஒரு கோடியே 40 லட்சம் டன் என மதிப்பிட்டுள்ளது. எல்.பி.ஜி., இறக்குமதி ஆண்டுதோறும் 5 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.சர்வதேச அளவில் எல்.பி.ஜி., விலை ஆகஸ்டில் டன் ஒன்று 600 டாலருக்கு கீழே இருந்தது; தற்போது 1,000 டாலராக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஆகஸ்ட் மாதத்தை விட திரவ பெட்ரோலியம் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ஐந்து ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.



எண்ணெய் நிறுவனங்களுக்கு அமைச்சகம் வழங்கியுள்ள உத்தரவின் அடிப்படையில், கடந்த வாரம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. ஆனால், சமையல் காஸ் சிலிண்டர், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை ஏற்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை.இதனால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசலுக்கு ஐந்து ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை தவிர்க்க என்ன செய்யலாம் என்பது குறித்து, நாளை (22ம் தேதி) மத்திய அரசு முடிவு செய்யவுள்ளது.


"எண்ணெய் நிறுவனங்களுக்கு, எதிர்பார்த்ததை விட 65 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக' பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.

இந்த இழப்பை சமாளிக்கவும், திடீரென எரிபொருள் விலை உயர்வை தடுக்கவும், இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, அடுத்த ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வெளியிடவுள்ளது.அதோடு, சர்வதேச விலை உயர்வு மற்றும் குளிர்கால தேவையை சமாளிக்கும் வகையில், சமையல் காஸ் சிலிண்டரின் விலையை ஜனவரி 1 முதல் 367 ரூபாய் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சமையல் காஸ் சிலிண்டர் விலை 345 ரூபாயாக உள்ளது.நாளை கூடவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சமையல் காஸ் விலையை உயர்த்திக்கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "சமையல் காஸ் மற்றும் டீசல் விலை உயர்வு நிச்சயம். ஆனால், எவ்வளவு உயரும் என்று சொல்ல முடியாது' என எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராஜாவை கைது செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்

Written on 11:53 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_149925.jpg 
சென்னை : ""ராஜாவை சி.பி.ஐ., கைது செய்ய வேண்டும்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பின், அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்:

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளதே?

ராஜாவை கைது செய்ய வேண்டும்.

சட்டசபை தேர்தலுக்கு உங்கள் கட்சி கூட்டணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

கூட்டணியில் முன்னேற்றம் ஏற்படும் போது உங்களிடம் தெரிவிப்பேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை: வழங்கினார் ஜெ., :கல்லூரி மாணவ, மாணவியருக்கு 13 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகையும், கட்சியினரின் குடும்பங்களுக்கு 11 லட்ச ரூபாய் குடும்ப நல நிதியுதவியும் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.அண்ணா அறக்கட்டளை சார்பில், கட்சி தொண்டர்களுக்கு குடும்ப நல நிதி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று, அ.தி. மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, நேற்று மதியம் 1.05 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.மருத்துவம், இன்ஜினியரிங், நர்சிங், கலை மற்றும் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிலும் 41 மாணவ, மாணவியரின் கல்விக்கு தேவைப்படும் தொகையான 13 லட்சத்து 23 ஆயிரத்து 924 ரூபாய் மற்றும் 21 கட்சியினரின் குடும்பங்களுக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, குடும்ப நல நிதியுதவியாக ஜெயலலிதா வழங்கினார்.இந்நிகழ்ச்சி முடிந்ததும், கட்சி அலுவலகத்தில் திரளாக கூடியிருந்த தொண்டர்களுக்கு ஜெயலலிதா இரு கைகூப்பி வணக்கம் செலுத்தி விட்டு தனது காரில் கிளம்பினார். அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில், "இதுவரை மொத்தம் 822 ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு 3 கோடியே 69 லட்சத்து 25 ஆயிரத்து 695 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

FeedBurner FeedCount

top

Back to Top
free counters

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket