துண்டு, துண்டாக வெட்டி மனைவியின் உடலை பிரிட்ஜில் வைத்த என்ஜினீயர்: 2 மாதத்துக்கு பிறகு வெளியே தெரிந்தது
Written on 6:30 AM by பூபாலன்(BOOBALAN)

எனவே 1 1/2 மாதத்துக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து டேராடூன் வந்தனர். அங்குள்ள பிரகாஷ் விகாரில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த ராஜேஷ் அனுபமா தலையை பிடித்து சுவற்றில் அடித்தார். இதில அனுபமா மயங்கி விழுந்தார். பின்னர் அனுபமா இறந்துவிட்டதாக ராஜேஷ் கருதினார். எனவே கொலையை மறைக்க திட்டமிட்டார். அனுபமா உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் உடலின் ஒவ்வொரு பாகங்களாக எடுத்து சென்று ஊருக்கு வெளியே மறைவிடங்களில் வீசிவிட்டு வந்தார். தனது குழந்தைகளிடமும் உறவினர்களிடமும் அனுபமா டெல்லி சென்றதாகவும் பின்னர் அவரை காணவில்லை என்றும் சொல்லி வந்தார். ஆனால் அனுபமாவின் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் டேராடூனுக்கு நேற்று வந்து விசாரித்தார்.
