**HI**FRIENDS**WELCOME TO MY BLOG**

பிரிட்டனில் 17 ஆண்டுகளுக்குப் பின் சாலைகளை மூடிய பனி (படங்கள் இணைப்பு)

Written on 10:45 PM by பூபாலன்(BOOBALAN)






17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிரிட்டனில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், மரங்கள், பாடசாலைகள் , வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் என அனைத்தும் பனி மூடிக் காணப்படுகிறது.

இதனால் பல சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும் , மக்களும், பாடசாலைகளுக்குச் செல்லும் சிறுவர்களும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். தற்போது அண்ணளவாக அனைத்து சாலைகளிலும் ஆறு அங்குலம் அளவிற்கு பனி படர்ந்து காணப்படுகிறது.



அடுத்த இரண்டு நாட்களில் பனிப்பொழிவு மேலும் அதிகமாகும் எனவும் 15 நாட்களுக்கு இந்த பனிப்பொழிவின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அநேகமாக இன்னும் ஓரிரு நாட்களுக்குப் பின் பனிப்பொழிவின் அளவு 10 அங்குலமாக இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1993 நவம்பருக்குப் பின் பிரிட்டனில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிபொழிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

If you enjoyed this post Subscribe to our feed

No Comment

Post a Comment

FeedBurner FeedCount

top

Back to Top
free counters

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket